Monday, December 12, 2011

என்னை விட்டால் யாருமில்லை

என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க
என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க
உன்னை விட்டால் வேறொருத்தி எண்ணமில்லை நான் காதலிக்க
உன்னை விட்டால் வேறொருத்தி எண்ணமில்லை நான் காதலிக்க
முத்து முத்தாய் நீரெதற்கு நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு
என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க

ஆனையின் தந்தம் கடைந்தெடுத்தார்ப் போல் அங்கமெலாம் ஓர் மினுமினுப்பு
ஆனையின் தந்தம் கடைந்தெடுத்தார்ப் போல் அங்கமெலாம் ஓர் மினுமினுப்பு
அழகர் மலையின் சிலைகளில் ஒன்று வந்து நின்றார் போல் ஒரு நினைப்பு
என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க

காலழகெல்லாம் காட்டிய வண்ணம் கலை அழகே நீ நடந்தாயோ
மேலழகெல்லாம் மூடியதென்ன கண் படும் என்றே நினைத்தாயோ
என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க

ராத்திரி நேரம் ரகசிய கடிதம் எழுதிட வேண்டும் இடையோடு
பூத்திரி குறைத்து ஏற்றிய தீபம் பொன்னொளி சிந்தும் இரவோடு
என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க

திரைப்படம்: நாளை நமதே (1975)
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ், பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் முத்துலிங்கம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்


No comments: