Monday, December 12, 2011

என்னை விட்டால் யாருமில்லை

என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க
என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க
உன்னை விட்டால் வேறொருத்தி எண்ணமில்லை நான் காதலிக்க
உன்னை விட்டால் வேறொருத்தி எண்ணமில்லை நான் காதலிக்க
முத்து முத்தாய் நீரெதற்கு நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு
என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க

ஆனையின் தந்தம் கடைந்தெடுத்தார்ப் போல் அங்கமெலாம் ஓர் மினுமினுப்பு
ஆனையின் தந்தம் கடைந்தெடுத்தார்ப் போல் அங்கமெலாம் ஓர் மினுமினுப்பு
அழகர் மலையின் சிலைகளில் ஒன்று வந்து நின்றார் போல் ஒரு நினைப்பு
என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க

காலழகெல்லாம் காட்டிய வண்ணம் கலை அழகே நீ நடந்தாயோ
மேலழகெல்லாம் மூடியதென்ன கண் படும் என்றே நினைத்தாயோ
என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க

ராத்திரி நேரம் ரகசிய கடிதம் எழுதிட வேண்டும் இடையோடு
பூத்திரி குறைத்து ஏற்றிய தீபம் பொன்னொளி சிந்தும் இரவோடு
என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க

திரைப்படம்: நாளை நமதே (1975)
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ், பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் முத்துலிங்கம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்


Monday, December 5, 2011

எத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி

பாடலை கேட்க







இறைவன் இரண்டு பொம்மைகள்

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட

வெய்யில் என்ன மின்னல் என்ன வெண்மை என்ன மஞ்சள் என்ன
காணாத கண்கள் ரெண்டில் எல்லாமும் ஒன்றடா
வெய்யில் என்ன மின்னல் என்ன வெண்மை என்ன மஞ்சள் என்ன
காணாத கண்கள் ரெண்டில் எல்லாமும் ஒன்றடா
தென்றல் காற்றும் ஊமைக்காற்று
தேவன் பாட்டும் ஊமைப்பாட்டு
அவன் தானே நம்மை செய்தான் துன்பங்கள் ஏனடா
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட

உங்களுக்காக நானே சொல்வேன் உங்களுக்காக நானே கேட்பேன்
தெய்வங்கள் கல்லாய்ப்போனால் பூசாரி இல்லையா
உங்களுக்காக நானே சொல்வேன் உங்களுக்காக நானே கேட்பேன்
தெய்வங்கள் கல்லாய்ப்போனால் பூசாரி இல்லையா
தந்தைப் பேச்சு தாய்க்கு புரியும் தாத்தா நெஞ்சில் உலகம் தெரியும்
தந்தைப் பேச்சு தாய்க்கு புரியும் தாத்தா நெஞ்சில் உலகம் தெரியும்

உள்ளத்தில் நல்லோர்தானே உயர்ந்தவர் இல்லையா
என் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட

மலரும்போதே வாசம் தெரியுது வளரும்போதே பாசம் புரியுது
தாய் தந்தை செய்த பூஜை வீணாகவில்லையே
மலரும்போதே வாசம் தெரியுது வளரும்போதே பாசம் புரியுது
தாய் தந்தை செய்த பூஜை வீணாகவில்லையே
மலரும்போதே வாசம் தெரியுது வளரும்போதே பாசம் புரியுது
தாய் தந்தை செய்த பூஜை வீணாகவில்லையே
கந்தன் அன்று மந்திரம் சொன்னான் கண்ணன் அன்று கீதை சொன்னான்
மகன் சொன்ன வேதம் கேட்டு மறைந்தது தொல்லையே
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை

படம் : உயர்ந்தவர்கள்
இசை : சங்கர்-கணேஷ்
பாடகர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & வாணி ஜெயராம்

அன்பு மேகமே இங்கு ஓடி வா

அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா

அன்பு தேவியே எந்தன் ஆவியே
உந்தன் கண்ணுக்குள் ஆட வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூற வா

கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது

பொன் வண்ண மேகங்கள் பேர் சொன்னதா
பூமாலை நான் சூடும் நாள் வந்ததா
நான் நீயன்றோ நீ நானன்றோ
எனது மயக்கம் தெளிந்ததோ

அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூற வா

காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க வந்தது உறவு
காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க வந்தது உறவு

சந்திரன் இங்கு சாட்சியுண்டு
சங்கமமாகும் காட்சியுண்டு
வா மஞ்சமே பார் நெஞ்சமே
புதிய உலகம் திறந்தது
பழைய கனவு மறைந்தது

அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா

படம்: எங்கம்மா சபதம்
இசை:விஜய் பாஸ்கர்
பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம் வாணி ஜெயராம்

எங்கம்மா சபதம் படத்தின் இந்தப் பாடலை பாலுவும் வாணி ஜெயராமும் பாடியிருக்கிறார்கள். படத்தைப் பற்றி அதிக விவரங்கள் கிடைக்கவில்லை. 1974-இல் S.P.முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த படம்.

நான் மெதுவாகத் தொடுகின்றபோது

நான் மெதுவாகத் தொடுகின்றபோது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
நான் மெதுவாகத் தொடுகின்றபோது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
திருமேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்
துயிலாது.. கண்கள் துயிலாது..
துயிலாது.. கண்கள் துயிலாது..

நீ மெதுவாகத் தொடுகின்றபோது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
நீ மெதுவாகத் தொடுகின்றபோது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
திருமேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்
துயிலாது.. கண்கள் துயிலாது..
துயிலாது.. கண்கள் துயிலாது..

அழகான கன்னங்கள் அதில் இன்ப வண்ணஙள்
அடையாளச் சின்னங்கள் கேட்க
அழகான கன்னங்கள் அதில் இன்ப வண்ணஙள்
அடையாளச் சின்னங்கள் கேட்க
சிறு காயங்கள் வரும் மயங்கள்
அது காலைதான் ஆறுமோ
சிறு காயங்கள் வரும் மயங்கள்
அது காலைதான் ஆறுமோ
பொன்னாகும் கன்னம் என்னாகும்
பொன்னாகும் கன்னம் என்னாகும்

நீ மெதுவாகத் தொடுகின்றபோது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
திருமேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்
துயிலாது.. கண்கள் துயிலாது..
துயிலாது.. கண்கள் துயிலாது..

பூமாலை மாங்கல்யம் பொன்னூஞ்சல் ஊர்கோலம்
கல்யாண வைபோகம் என்று
பூமாலை மாங்கல்யம் பொன்னூஞ்சல் ஊர்கோலம்
கல்யாண வைபோகம் என்று
ஒரு நாள் பார்த்து திருத் தோள் பார்த்து
நான் பெற வேண்டும் பூச்சரம்
ஒரு நாள் பார்த்து திருத் தோள் பார்த்து
நான் பெற வேண்டும் பூச்சரம்
தை மாதம் எந்த வைபோகம்
தை மாதம் எந்த வைபோகம்

நான் மெதுவாகத் தொடுகின்றபோது
கண் மயங்காமல் இருப்பாளோ மாது
திருமேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்
துயிலாது.. கண்கள் துயிலாது..
துயிலாது.. கண்கள் துயிலாது..

படம் : உனக்கும் வாழ்வு வரும்
குரல் : ஜெயச்சந்திரன், சுசீலா
இசை : சங்கர் கணேஷ்


ஒ நெஞ்சமே இது உன் ராகமே

ஒ நெஞ்சமே இது உன் ராகமே
ஒ நெஞ்சமே இது உன் ராகமே
கோடை காற்றில் கூடும் கூட்டில்
கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும்
ஒ நெஞ்சமே இது உன் ராகமே

ஒ நெஞ்சமே இது உன் ராகமே
ஒ நெஞ்சமே இது உன் ராகமே
கோடை காற்றில் கூடும் கூட்டில்
கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும்
ஒ நெஞ்சமே இது உன் ராகமே

எண்ணங்களின் வண்ணங்களில் உன் தோற்றமே
என் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே
எண்ணங்களின் வண்ணங்களில் உன் தோற்றமே
என் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே

யாரோடு யாரை கை சேர்ப்பதென்று
யார் சொல்ல கூடும் நம்மோடு இன்று
சேர வேண்டும் ஒன்று சேர்ந்து வாழவேண்டும்

ஒ நெஞ்சமே இது உன் ராகமே

எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கணம்
என் உள்ளமும் உன்னோடு தான் சேரும் தினம்
எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கணம்
என் உள்ளமும் உன்னோடு தான் சேரும் தினம்

என் ஆசை ஆடும் உன்னோடு பின்னி
என் தேவை யாவும் நீ தந்த பின்னும்
ஏங்கி வாடும் இந்த நேரம் தாங்க வேண்டும்

ஒ நெஞ்சமே இது உன் ராகமே

லாலாலலா ல ல லாலாலலா

கோடை காற்றில் கூடும் கூட்டில்
கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும்
ஒ நெஞ்சமே இது உன் ராகமே

லாலாலலா ல ல லாலா ...

படம்: எனக்காக காத்திரு
இசை: இளையராஜா
பாடியவர்: தீபன் சக்கரவர்த்தி S. ஜானகி


மழை தருமோ என் மேகம்

மழை தருமோ என் மேகம்…
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்…
தோகைக்கு தூதுவன் யாரோ… தோல் தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன… பொண்வண்டே….
(மழை தருமோ)

ஆஆஅஹஹா…ஒஹொஹோ….ம்ம்ஹ்ஹ்ஹூம்…

தேனிருக்கும் வண்ண மலர் நேராடுது…
தேனீயில் ஒன்று இங்கு போராடுது… (தேனிருக்கும்)
அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்த கோலம்
தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்…
தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்…
தளிர்மேனி அன்னப்பெடு எண்ணம் மாறுமா…
(மழை தருமோ)

ஆஆஅஹஹா…ஒஹொஹோ….ம்ம்ஹ்ஹ்ஹூம்…

கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள்…
காதலுக்குள் என்று அவள் படியேருவாள்..
சிரிக்கின்ற தங்க சிற்பம் தேரில் வராதோ…
சிலை வண்ணம் அங்கே… கலை உள்ளம் இங்கே..
நிலை தன்னை சொல்ல தூதுவன் எங்கே…
பிழைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடி வா…
(மழை தருமோ)

ஆஆஅஹஹா…ஒஹொஹோ….ம்ம்ஹ்ஹ்ஹூம்…

படம்: மனிதரில் இத்தனை நிறங்களா
இசை: சியாம்
பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம், S.P.சைலஜா