அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா
அன்பு தேவியே எந்தன் ஆவியே
உந்தன் கண்ணுக்குள் ஆட வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூற வா
கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
பொன் வண்ண மேகங்கள் பேர் சொன்னதா
பூமாலை நான் சூடும் நாள் வந்ததா
நான் நீயன்றோ நீ நானன்றோ
எனது மயக்கம் தெளிந்ததோ
அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூற வா
காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க வந்தது உறவு
காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க வந்தது உறவு
சந்திரன் இங்கு சாட்சியுண்டு
சங்கமமாகும் காட்சியுண்டு
வா மஞ்சமே பார் நெஞ்சமே
புதிய உலகம் திறந்தது
பழைய கனவு மறைந்தது
அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா
படம்: எங்கம்மா சபதம்
இசை:விஜய் பாஸ்கர்
பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம் வாணி ஜெயராம்
எங்கம்மா சபதம் படத்தின் இந்தப் பாடலை பாலுவும் வாணி ஜெயராமும் பாடியிருக்கிறார்கள். படத்தைப் பற்றி அதிக விவரங்கள் கிடைக்கவில்லை. 1974-இல் S.P.முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த படம்.
No comments:
Post a Comment