Monday, December 5, 2011

இறைவன் இரண்டு பொம்மைகள்

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட

வெய்யில் என்ன மின்னல் என்ன வெண்மை என்ன மஞ்சள் என்ன
காணாத கண்கள் ரெண்டில் எல்லாமும் ஒன்றடா
வெய்யில் என்ன மின்னல் என்ன வெண்மை என்ன மஞ்சள் என்ன
காணாத கண்கள் ரெண்டில் எல்லாமும் ஒன்றடா
தென்றல் காற்றும் ஊமைக்காற்று
தேவன் பாட்டும் ஊமைப்பாட்டு
அவன் தானே நம்மை செய்தான் துன்பங்கள் ஏனடா
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட

உங்களுக்காக நானே சொல்வேன் உங்களுக்காக நானே கேட்பேன்
தெய்வங்கள் கல்லாய்ப்போனால் பூசாரி இல்லையா
உங்களுக்காக நானே சொல்வேன் உங்களுக்காக நானே கேட்பேன்
தெய்வங்கள் கல்லாய்ப்போனால் பூசாரி இல்லையா
தந்தைப் பேச்சு தாய்க்கு புரியும் தாத்தா நெஞ்சில் உலகம் தெரியும்
தந்தைப் பேச்சு தாய்க்கு புரியும் தாத்தா நெஞ்சில் உலகம் தெரியும்

உள்ளத்தில் நல்லோர்தானே உயர்ந்தவர் இல்லையா
என் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட

மலரும்போதே வாசம் தெரியுது வளரும்போதே பாசம் புரியுது
தாய் தந்தை செய்த பூஜை வீணாகவில்லையே
மலரும்போதே வாசம் தெரியுது வளரும்போதே பாசம் புரியுது
தாய் தந்தை செய்த பூஜை வீணாகவில்லையே
மலரும்போதே வாசம் தெரியுது வளரும்போதே பாசம் புரியுது
தாய் தந்தை செய்த பூஜை வீணாகவில்லையே
கந்தன் அன்று மந்திரம் சொன்னான் கண்ணன் அன்று கீதை சொன்னான்
மகன் சொன்ன வேதம் கேட்டு மறைந்தது தொல்லையே
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை

இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை

படம் : உயர்ந்தவர்கள்
இசை : சங்கர்-கணேஷ்
பாடகர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & வாணி ஜெயராம்

No comments: