தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணமலே
அது தொடர்ந்து எனை படர்ந்து
ஏதோ சொல்கின்றது... மனம எங்கோ செல்கின்றது
(தவிக்குது)
ஏதோ ஒன்று நெஞ்சிலே எழுந்ததென்ன உன்னிலே
எங்கோ சென்ற கண்ணிலே ஏக்கம் என்ன பெண்ணிலே
மலர்ந்திடாத ஆசையே மலருகின்ற நேரமே
எண்ணிய சுகம் என்னுடன் வரும்
லா..லலல்லல்லா...லா..லலல்லல்லா...
கனியிதழ் சுவைதனில் காதல் நீராடு
(தவிக்குது)
பொங்கும் ஆசை ஆற்றிலே நனைந்த தென்தன் உள்ளமே
எங்கும் இன்ப வெள்ளமே எழுந்து பாய்ந்து செல்லுமே
தோன்றுகின்ற தாகமே.. தொடருகின்ற காலமே
பார்ப்பதில் சுகம் பல வித ரகம்
லா..லலல்லல்லா...லா..லலல்லல்லா...
பசிக்கொரு உணவென பாவை நீ வா வா
(தவிக்குது)
கங்கை கொண்ட சோழனின் கனவில் வந்த தேவியே
மங்கை எந்தன் வாழ்விலே மன்னன் நீயும் பாதியே
சிலையை போன்ற தோற்றமே தினம் என்னை வாட்டுமே
இன்னிசை சுரம் என் வசம் தரும்...
லா..லலல்லல்லா...லா..லலல்லல்லா...
இரவிலும் பகலிலும் மீட்ட நீ வா வா
திரைப்படம்:நதியைத் தேடி வந்த கடல் (1980)
பாடகர்கள்: ஜெயச்சந்திரன், எஸ்.பி.சைலஜா
இசையமைப்பு: இளையராஜா
நதியை தேடி வந்த கடல் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. லெனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
No comments:
Post a Comment