ஆனந்த தாகம் உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
நாணம் தோற்குமே
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே
பெ: ஆனந்த தாகம் என் கூந்தல் பூக்கள் தீர்க்குமோ
நாணம் தோற்குமோ
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமோ
உண்மையில் என் மயில் ஆடுமுன்...ஆடுமுன்
பொன் மழைக்காலம் போய்விடும்...போகட்டும்
ஆசை ஆறி விட நேர்ந்திடும்..நேருமோ
ராத்திரி அலைகள் ஓயட்டும்..ஓயுமோ
மூத்தவர் தலைகள் சாயட்டும்..சாயுமோ
தீபத்தின் விழிகள் மூடட்டும்..மூடுமோ
ஆடை கொடு..ஆளை விடு
தேகம் தொடு..போதும் விடு
தாகம் ஊறுதே
வளைக்கரம் ஒலிக்கையில் மானம் போகுதே
ஆனந்த தாகம்...
கன்னியின் மேனி வேர்க்குதே...ஏனம்மா
ஜன்னலின் கம்பி பார்க்குதே...அட ராமா
பேசும் ஓசையொன்று கேட்குதே...கேட்குமோ
திரிகளை விரல்கள் தூண்டுதே...தூண்டாதே
அணைகளை வெள்ளம் தாண்டாதே... தாண்டாதே
ஆசை நாகம் வந்து தீண்டுதே..தீண்டாதே..
நாணம் வந்து ஊர்கின்றது...தீயில் விஷம் சேர்கின்றது
கண்கள் மூடுதே
அணைக்கையில் கவிக்குயில் ஊமை ஆனதே
ஆனந்த தாகம்...லாலால லாலா..
உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
லாலால லாலா லாலலா..
நாணம் தோற்குமே..லாலா லாலலா..
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே
லாலா லாலலா..நேரம் பார்க்குமே
ஆஆ ஆஅஆ..நேரம் பார்க்குமே
லாலா லாலலா..நேரம் பார்க்குமே
லாலா லாலலா..
வா இந்தப் பக்கம்
இசை: ஷ்யாம்
பாடியவர்கள்: தீபன் சக்கரவர்த்தி & எஸ். ஜானகி
More info on the song at SOTD
No comments:
Post a Comment